இங்குக் காட்டப்பட்டுள்ள மொழித்திணைப்படத்தில் நாவலந்தேயம் ஆகிய பரதகண்டத்தில் முந்துதமிழ்(Proto Tamil) என்ற நிலையில் சற்றே வேறிய நிலையில் இக்கண்டம் முழுவதிலும் விளங்கியிருந்த்து பழந்தமிழ் மொழியே. எழுத்து பெற்றும் பெறாமலும் இலக்கியம் பெற்றும் பெறாமலும் திருந்திய வழக்கு திருந்தா வழக்கு என இருவகைப்பட்டதாக ஒரே மூலப்பெருமொழியே இலங்கியது. காலவோட்டத்தில் மக்கள்தம் இடம், நிலை, ... போன்ற மாற்றங்களால் மொழியிலும் மாற்றங்கள் அவற்றுக்குத் தக ஏற்பட்டன. அவை காழ்த்து முதிர்ந்து வடிவுதிரிந்த சற்றொப்ப 5000 ஆண்டு எல்லைக்குள் நின்ற மாற்றங்களின் தொகுமொத்ததத் தோராயமான வரையீடுதான் மேற்காணும் திணைப்படம்.

No comments:
Post a Comment